Close
செப்டம்பர் 13, 2024 1:34 மணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் இரத்த தான முகாம்

சிவகங்கை

சிவகங்கையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்

சிவகங்கை:  சிவகங்கை நகர் தவ்ஹீத் ஜமா அத் கிளை சார்பாக 11 -ஆவது  ஆண்டு இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

முகாமுக்கு மாநிலச் செயலாளர் சகோதரர் ரபீக் முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆசிப் முகமது மற்றும் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தீன் மற்றும் மாவட்ட மருத்துவமனை செயலாளர் வரிசை முகமது  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அன்னராஜ்  கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.

சிவகங்கை

இதில் 50-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்  இரத்ததானம் அளித்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சித்து ஹரி தலைமை யிலான மருத்துவ குழுவினர்   தானம் அளித்த ரத்த யூனிட் களை சேகரித்தனர் . இதில் நகர தலைவர் ஹூமாயூன் கபூர், செயலாளர் காதர் மைதீன், பொருளாளர் உமர், துணைத் தலைவர் ராஜா முஹம்மது, துணைச் செயலாளர் மன்சூர்,  மருத்துவ அணி செயலாளர் நஸ்ருதீன்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top