Close
ஜூன் 6, 2025 1:46 மணி

மனிதம் மரித்து போகவில்லை: அழுக்கு உடையுடன் சாலையில் சுற்றி திரிந்தவருக்கு உதவிய மாமன்ற உறுப்பினர்

சாலையில் சுற்றித்திரிந்த வாலிபரை அழைத்து முடி திருத்தம் செய்து, புத்தாடை அணிந்து கருணாநிதி பிறந்த நாள் விழாவை கொண்டாட வைத்த காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர் செயல் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதிகளில் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் அழுக்கு உடை அணிந்து பேருந்து நிலையம் மற்றும் கடை வாசல்களில் படுத்து உறங்கி வருகிறார். இவரது வலது பாதம் அகற்றப்பட்ட நிலையில் கடினமான சூழ்நிலைகளை யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆட்டோ சங்க உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றபோது அங்கு வந்த மாமன்ற உறுப்பினர் செவிலிமேடு மோகனிடம் யாசகம் கேட்டுள்ளார்.

இவரது நிலையை அறிந்த அவர் உடனடியாக மருத்துவர் மற்றும் சிகை அலங்கார நிபுணர்களை வரவழைத்து அவருக்கான மருத்துவ உதவி மற்றும் சிகை நீக்கி குளித்து வர செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு புதியதாக கால் சட்டை மற்றும் வெண்பட்டு சட்டை அணிவித்து அவரை இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என அவருக்கு தெரிவித்து அது குறித்த செய்தித்தாளை படிக்க வைத்து அவரது பிறந்த நாளில் இன்று நீ மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறி அவர் வைத்திருந்த இனிப்புகளை பேருந்து மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் வழங்க வைத்து அவரை மகிழ்ச்சியுற செய்துள்ளார்.

இந்த செயலை மேற்கொண்ட மாமன்ற உறுப்பினரின் நடவடிக்கை அங்கிருந்த அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top