Close
செப்டம்பர் 19, 2024 6:54 மணி

ஈரோட்டில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி 

ஈரோடு

ஈரோட்டில் இந்திய மருத்துவசங்கம் சார்பில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் உலக புற்றுநோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணிக்கு ஈரோடு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி தலைமை வகித்தார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் ராஜா கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியானது, ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து துவங்கி, பெருந்துறை ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, திருப்பூர் குமரன் சாலையில் நிறைவடைந்தது.

ஈரோடு
புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற செவிலியர்கள்

பேரணியில் கலந்து கொண்ட செவிலியர்கள் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் தேர்வு அபுல்ஹாசன், மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன், மாவட்ட தலைவர் டாக்டர் தம்பிராஜன், முன்னாள் மாநில தலைவர் சுகுமார், முன்னாள் தலைவர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top