Close
மே 20, 2024 1:38 மணி

நம்பியூர் பேரூராட்சி 8 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

நம்பியூர் போரூராட்சி

நம்பியூர் பேரூராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மேகலா செந்தில்குமாருக்கு வாக்கு சேகரித்த ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம்

நம்பியூர் பேரூராட்சி 8 -ஆவது வார்டில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்றியச்செயலர்  தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

நம்பியூர் பேரூராட்சி 8 -ஆவது வார்டில் அதிமுக வினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  நகர்புற உள்ளாட்சி தேர்தலுக் கான மனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன்  முடிந்தது.     சனிக்கிழமை (5.2.2022) மனு வாபஸ் பெறும் நிகழ்வு  நடைபெறுகிறது.

இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் வார்டு பகுதிகளில்  தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சிக் குள்பட்ட அனைத்து வார்டுகளிலும் அதிமுக வினர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். நம்பியூர் பேரூராட்சி 8 -ஆவது வார்டில் அதிமுக  சார்பில்  போட்டியிடும்  மேகலாசெந்தில்குமாருக்கு  ஆதாரவாக நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளரும், 7 -ஆவது வார்டு வேட்பாளருமான தம்பி சுப்பிரமணியன் தீவிர பிரசாரம் செய்தும்  வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top