Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

புதுக்கோட்டை மன்னர்கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்துக்கு அமெரிக்க வாழ் தமிழர் நன்கொடை வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்துக்கு நன்கொடை வழங்கிய நிகழ்வில் பங்கேற்றோர்

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்துக்கு  அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் நன்கொடை வழங்கினார்.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண முன்னாள் வெளியுறவுத் துறை செயலரும், புதுக்கோட்டை மண்ணின் மைந்தருமான ராஜன் நடராஜன் தான் பயின்ற புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்துக்கு ரூ.2 லட்சம் நன்கொடையை,   புதுக்கோட்டையிலுள்ள தனது சகோதரர் வழக்கறிஞர்  நவநீதன் மூலமாக, மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்துக்கு வழங்கினார்.
இதற்கான  காசோலையை கல்லூரி முதல்வர் திருச்செல்வம்
பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாக்கக்குழுத்தலைவர் ரா. சம்பத்குமார், கல்வியாளர்கள் கருப்பையா, ஆர். ரவிச்சந்திரன், பேராசிரியர் கணேசன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top