Close
செப்டம்பர் 19, 2024 11:18 மணி

பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை மற்றும் குடும்ப சந்திப்பு விழா

புதுக்கோட்டை

மாவட்ட ஆளுநர் ஜெய கண் சிறப்புரையாற்றினார் வடசேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு சீருடை வாங்க ரூபாய் 10 ஆயிரம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை மற்றும் குடும்ப சந்திப்பு விழா
பேலஸ் சிட்டி ரோட்டரி  தலைவர் துரைமணி தலைமையில்  நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர்  ஜெயகண் சிறப்புரையாற்றினார்.   வடசேரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி  என்எஸ்எஸ் மாணவர்களுக்கு  சீருடை வாங்குவதற்காக ரூ.10 ஆயிரம்  நிதியை,  பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது .  விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, துணை ஆளுநர்கள்  பாண்டியராஜ், கருணாகரன், மற்றும் முன்னாள் தலைவர்கள் ரவிச்சந்திரன் கருப்பையா, வீரன், சேகர், விஜயராமன், முன்னாள் செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.நிறை வாக சங்கச் செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top