Close
மார்ச் 31, 2025 4:27 காலை

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி பெயர் இல்லை

சமீபத்திய ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025 இன் படி, தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.1 லட்சம் கோடி குறைந்ததால், அவர் உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார். அதிகரித்து வரும் இழப்புகள் இருந்தபோதிலும், அம்பானி ஆசியாவின் பணக்காரர் என்ற பட்டத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டார்.

உலகின் பணக்காரர் பட்டத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வென்றார், அவரது நிகர மதிப்பு வியக்கத்தக்க வகையில் 82% அல்லது 189 பில்லியன் டாலர் அதிகரித்து, மொத்தம் 420 பில்லியன் டாலரை எட்டியது.

எச்சிஎல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் ரூ.3.5 லட்சம் கோடி நிகர மதிப்புடன், உலகின் ஐந்தாவது பணக்காரப் பெண்மணியானார். மேலும் உலகின் முதல் 10 பெண்களில் இடம்பிடித்த முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை அம்பானி தவறவிட்டாலும்,  ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்தார். முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.6 லட்சம் கோடி ஆகும்.

அம்பானி முதலிடத்தில் இருந்தாலும், அதானி அடுத்த இடத்தில் உள்ளார். அதானி நிறுவனத்தின் பங்கு கடந்த ஆண்டு பல சரிவுகளை சந்தித்திருந்தது. இருந்தும், கடந்த ஆண்டில், அவரது சொத்து மதிப்பு 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால், அம்பானிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் அதானி.

கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடி ஆகும். ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2025 இல் அதானியின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களை ஹெச்.சி.எல்லின் ரோஷினி நாடார் (ரூ.3.5 லட்சம் கோடி), சன் பார்மசூட்டிகல் தொழிற்சாலைகளின் திலிப் சங்க்வி (ரூ.2.5 லட்சம் கோடி), விப்ரோவின் அசிம் பிரேம்ஜி (ரூ.2.2 லட்சம் கோடி) பிடித்துள்ளனர்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலின் டாப் 10 இடங்களில் ரோஷினி நாடார் முதல்முறையாக இடம்பிடித்துள்ளார். அதுவும் மூன்றாம் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top