ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுகியதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளையும் விடுத்தது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்காவின் கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர், அதே நேரத்தில் ஹவாய் குறைந்த அளவிலான சுனாமி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது, நாட்டின் பசிபிக் கடற்கரையை 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
ஜப்பானிய பாபா வங்காவின் கணிப்பு
பாபா வங்கா மிகவும் பிரபலமான தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார். இதற்குக் காரணம் அவரது பயங்கரமான கணிப்புகள்தான். பாபா வாங்காவின் பல பயங்கரமான கணிப்புகள் இன்றுவரை உண்மையாகிவிட்டன.
பெண்ணாக இருந்த பாபா வங்காவைப் போலவே, ஜப்பானைச் சேர்ந்த ரியோ டாட்சுகி என்ற பெண்ணும் தனது கணிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். அதனால்தான் மக்கள் அவரை ஜப்பானிய பாபா வங்கா என்றும் அழைக்கிறார்கள்.
இப்போது அவரது அத்தகைய ஒரு கணிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது மக்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ரியோ டாட்சுகி எழுதிய ஒரு புத்தகத்தில், ஜூலை 2025 இல், ஜப்பானின் தெற்கு கடலில் ஒரு கடலுக்கு அடியில் எரிமலை வெடிக்கும். இது ஒரு ஆபத்தான சுனாமியை ஏற்படுத்தும், இது ஜப்பானின் தெற்கு தீவை மட்டுமல்ல, தைவானின் கடலோரப் பகுதியையும் இந்தோனேசியாவின் சில பகுதிகளையும் இந்த சுனாமி பாதிக்கும். இந்த சுனாமி பேரழிவை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளார்.




