Close
ஜூன் 30, 2024 5:06 மணி

சாதனை உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்

இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து எட்டாவது முறையாக பாலிசி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தை பெரிய அளவில் லாபம் கண்டது.

செவ்வாய்கிழமை வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்ப போக்குகள் பெரும் நஷ்டத்தை  தூண்டிய பிறகு, இது மூன்றாவது தொடர்ச்சியான ஆதாய அமர்வு ஆகும். சென்செக்ஸ், பிஎஸ்இ பெஞ்ச்மார்க், முந்தைய இரண்டு அமர்வுகளில் இருந்து 2,995.46 புள்ளிகள் அல்லது 4.15 சதவீதம் உயர்ந்துள்ளது,

30-பங்குகளின் சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து அதன் சாதனையான 76,787 புள்ளிகளுக்கு உயர்ந்தது, அதே நேரத்தில் நிஃப்டி 450-க்கும் மேற்பட்ட புள்ளிகள் உயர்ந்தது.

விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்ட்ப்படுத்தும் விதமாக இன்று காலை அதன் முக்கிய கடன் விகிதத்தை தொடர்ந்து எட்டாவது முறையாக 6.5% ஆக மாற்றியமைத்தது, தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், வாக்கு எண்ணும்நாளில் சந்தைகள் கிட்டத்தட்ட 6% சரிந்தன.

ஆசிய சந்தையில் சியோல் லாபத்துடனும் டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் வர்த்தகம் குறைந்தும் முடிவடைந்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top