Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

ஸ்டான்லி மருத்துவமனையில் 11 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’

தமிழ்நாடு

உலக இருதய தினம்

சென்னை அரசு  ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது என மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பி.பாலாஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தின விழா நிகழ்ச்சி  நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு இருதயவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கே கண்ணன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மருத்துவமனை முதல்வர் டாக்டர் பி.பாலாஜி இதயநோய் சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.  .

11 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’:

அப்போது கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி கூறியதாவது,
இதயப் பூர்வமாக இருதய நோயைத் தடுப்போம் என்பது இந்த ஆண்டு முழக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்கான ‘கேத் லேப்’ தொடங்கப்பட்டு சுமார் மூன்றரை ஆண்டுகளில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை மற்றும் ‘ஆஞ்சியோ பிளாஸ்ட்’ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவீன கருவிகளுடன் கூடிய இவ்வகைச் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகமான தொகை செலவு செய்ய வேண்டிய நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் கட்டணம் ஏதுமின்றி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் உதவியுடன் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை
உலக இருதய தினத்தை ஒட்டி  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளி களுடன் கலந்துரையாடிய கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி துறை தலைவர் டாக்டர் கே கண்ணன்

இருதய நோயால்  மாரடைப்பு ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இருதய நோய் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்துவது தன் உலக இருதய நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம்.

அளவுக்கு அதிகமான மது அருந்துதல், புகைபிடித்தல், சீரற்ற உணவு பழக்கங்கள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்,  மரபுவழி காரணிகள் உள்ளிட்டவை களால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே சீரான உணவு பழக்கங்களுடன் தினசரி  உடற்பயிற்சி யைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.  புகை பிடிக்கும் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.   இந்நோயை தொடக்கத் திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார் டாக்டர் பாலாஜி.

நிகழ்ச்சியில் இருதயவியல் தலைவர் டாக்டர் கே.கண்ணன், துணைக்  கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார்,  கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஜமீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top