Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டிகள்: திருச்சி புனித வளனார் கல்லூரி அணி முதலிடம்

புதுக்கோட்டை

புதுகை ஜெ கல்லூரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற அணியினர்

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப் பந்தாட்டப் போட்டிகள்  புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள ஜெ .ஜெ . கலை அறிவியல் கல்லூரியில்      10.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்ட திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்  உள்ளிட்ட  நகரங்களில் இருந்து எட்டு அணிகள் பங்கேற்று விளையாடினர்.

இந்த போட்டிகள்  நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றது. முன்னதாக இப்போட்டியினை கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

லீக் சுற்றுக்கு, திருச்சி புனித வளனார் கல்லூரி , ஜமால் முகமது கல்லூரி, பிஷப்ஹபீர் கல்லூரி. மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாக அணியினர் தகுதி பெற்றனர்.

இறுதியில் திருச்சி புனித வளனார் கல்லூரி அணியினர் முதல் இடத்தை பிடித்தனர். தொடர்ந்து ஜமால் முகமது கல்லூரி இரண்டாம் இடத்தையும், பிஷப்ஹபீர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாக கல்லூரி அணியினர் மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடித்தனர்.

போட்டிகளில் வென்ற அணியினருக்கு வெற்றிக் கோப்பை மற்றும்  பாராட்டு சான்றிதழ்களை ஜெ .ஜெ . கல்வி குழும செ யலர்  ந. சுப்பிரமணியன், பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர்  ஆர்.காளிதாசன் ஆகியோர் வழங்கினர்.  ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித் துறை தலைவர் முனைவர்கே.ஜெகதீஷ்பாபு மற்றும் பல்கலை க்கழக ஆண்கள் பிரிவு  போட்டி  ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர்  செய்து இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top