Close
செப்டம்பர் 20, 2024 6:54 காலை

 வடவாளம்  அரசு மேல்நிலைப்பள்ளியில்   இலவச கண் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடவாளம் அரசு பள்ளியில் ரோட்டரி, ஆதிகாலத்து அலங்கார மாளிகை இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாம்

புதுக்கோட்டை  வடவாளம்  அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ரோட்டரி சங்கம்,  ஆதிகாலத்து அலங்கார மாளிகை,  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை  இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்  வாராப்பூர்  அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது.முகாமிற்கு ரோட்டரி சங்க   தலைவர் பிரகாஷ்  தலைமை வகித்தார்.  செயலாளர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

காலை  முதல் மாலை  வரை நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 217 நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர்   அவர்களில் கண் புரை சிகிச்சைக்காக  80 பேர் தேர்வு செய்யப்பட்டு     மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

புதுக்கோட்டை
வடவாளம் அரசு பள்ளியில் நடைபெற்ற கண்பரிசோதனை முகாம்

நிகழ்வில், புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை  உரிமையாளர் அருண்,ரோட்டரி  சங்க நிர்வாகிஆரோக்கியசாமி,  முன்னாள் தலைவர்கள், அருணாசலம்  உள்ளிட்ட    உறுப்பினர்கள்,    புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை பணியாளர்கள்,  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பி. விவேகானந்தன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள்  உள்ளூர் பிரமுகர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top