Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

விவசாயிகளுக்குத்தேவையான உரங்கள் விதைகள் இருப்பில் உள்ளன: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தலைமையில் இன்று (31.05.2023) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு மே மாதம் வரை இயல்பான மழையளவான 132.00 மி.மீ-க்கு 221.16 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. மே மாதம் வரையில் 89.15 மி.மீ கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.

பயிர்ச் சாகுபடி விவரம் 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 2720 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 153 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 80 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 188 எக்டர் பரப்பிலும், கரும்பு 12 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 2 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12584 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இடுபொருட்கள் இருப்பு மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 68.675 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 49.896 மெ.டன் பயறு விதைகளும், 24.365 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.151 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.050 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறுவை பருவத்திற்கு உகந்த ரகங்களான ஆடுதுறை 45, கோ 51 ஆகிய வற்றை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மே-2023 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2750 மெ.டன்களுக்கு, இதுவரை 2652 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் விநியோகத் திட்ட இலக்கின் படி 720 மெ.டன்களுக்கு 335 மெ.டன் வரப்பெற்றுள்ளது. பொட்டாஷ் உரம் 200 மெ.டன்களுக்கு 190 மெ.டன்களும், காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 2240 மெ.டன்களுக்கு இதுவரை 868 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 5228 மெ.டன்னும், டிஏபி 1526 மெ.டன்னும், பொட்டாஷ் 383 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 3737 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மட்டும் 1438 மெ.டன் யூரியா, 233 மெ.டன் டிஏபி, 117 மெ.டன் பொட்டாஷ், 569 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். 2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுஇ அவற்றில் 79 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 79 தரிசு நில தொகுப்பில் 65 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு 3 தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தரிசு நில தொகுப்புகளில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000- மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர்,  ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் – மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து DBT Mode -ற்கு மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகள் விரைந்து  e-KYC-யினை இம்மாதம் 16.06.2023 ஆம் தேதிக்குள் சரிபார்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதன் பொருட்டு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய்ப் பனை மற்றும் தென்னை மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனமும், பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்குத் தெளிப்புநீர்ப் பாசனம்இ மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

நெற்பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் கட்டுப்பாடு, இந்நோiயினை பரப்பும் பாக்டீரியா பாசன நீர் மூலமாகவும்இ பாதிக்கப்பட்ட பயிரின் மேல் மழைநீர் பட்டு வழிந்தோடுவதாலும்,  பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் காயத்தாலும் பரவுகிறது.

காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல்இ மந்தமான தட்பவெப்பநிலை அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ்; நிலவுதல்இ காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும். நிழலான பகுதிகள்இ நெருக்கமாகப் பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும் சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும்.

இலையின் ஓரத்தில் வட்ட வடிவ மஞ்சள நிறப் புள்ளிகள் தோன்றி அடுத்தடுத்து இருக்கும் புள்ளிகளுடன் இணைந்து அளவில் பெரியதாகி,  இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிக் காய்ந்து பின்பு உதிர்ந்து விடும். வளர்ந்தபயிர்களில் இலையின் நுனிப்பகுதியானது மஞ்சள் அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்துடன் நீரில் நனைந்த கீற்றுகளாக மாறத் தொடங்கிஇ பின்பு அளவில் பெரிதாகி வைக்கோல் நிறமாகி, இறுதியில் பழுப்பு நிறக் காய்ந்த கோடுகளாகக் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் இலை முழுவதும் காய்ந்து விடும்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீதப் பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாகக் இருந்தால் காப்பர் ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், மானிய முன்பதிவுஇ உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல்இ வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்களில் பயன் பெற உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திட வேண்டும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு)  ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர்  பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர்  கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர்  தனலெட்சுமி, மேற்பார்வை பொறியாளர் (மின்சார வாரியம்)  சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top