Close
செப்டம்பர் 20, 2024 5:39 காலை

புதுக்கோட்டையில் மகளிருக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி     

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான மகளிர் செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்த மாவட்ட சதுரரங்கக்கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன்

புதுக்கோட்டையில் மகளிருக்கான      மாவட்ட அளவிலான    செஸ்   போட்டி  புதுக்கோட்டை  அலுவலர் மன்றத்தில்   நடைபெற்றது.

அலுவலர்  மன்ற  நிர்வாகி டாக்டர் ராமசாமி தலைமை வகித்தார் . துக்கோட்டை மாவட்ட  செஸ் சங்க  நிர்வாகி முனைவர்   கணேசன்  வரவேற்றார்    போட்டியினை   புதுக்கோட்டை  தொகுதி  சட்டமன்ற   உறுப்பினர் டாக்டர்   முத்துராஜா     தொடங்கி  வைத்தார்.

மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்து  செஸ்   வீராங்கனைகள்   கலந்து கொண்டனர்.  வெற்றி பெற்றவர்கள் விவரம்:  ஓபன்  பிரிவில்,  நவசக்தி –  முதலிடம்      ஜோதிகா —  இரண்டாமிடம்  ,    தாட்சயணி  ஐயப்பன் – மூன்றாமிடமும்,
பதினைந்து வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில்   ஆஷினி   வந்தனா   – முதலிடம் ,  கீர்த்தனா – இரண்டாமிடம்,   அடேலின்  ஜெனிதா – மூன்றாமிடம்.

பனிரெண்டு  வயதுக்கு  உட்பட்டோருக்கான பிரிவில் –   ஸ்ரீநிதி -செல்லப்பா  முதலிடம் , எஸ். தர்ஷினி  இரண்டாமிடம்,  எஸ். சிவசங்கரி – மூன்றாமிடம்.
ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில்,    யாழினி எஸ். — முதலிடம், விகாஸினி – இரண்டாமிடம்   மற்றும் – மகிழினி மூன்றாமிடம்  வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசுகளை புதுக்கோட்டை   மாவட்ட   செஸ்   சங்க  தலைவர்  தொழிலதிபர்  எஸ்.  ராமசந்திரன்  வழங்கி  வாழ்த்தினார்.

போட்டிக்கான ஏற்பாடுகளை    புதுக்கோட்டை மாவட்ட  செஸ் சங்க  நிர்வாகிகள்    முனைவர்   கணேசன்,  அங்கப்பன், ,ஜெயக்குமார், பார்த்திபன்,  சேதுராமன்,  நவநீதகிருஷ்ணன் மற்றும்     முனைவர்  ரமேஷ் ஆகியோர்   செய்திருந்தனர். நிறைவாக மாவட்ட  செஸ் சங்க  நிர்வாகி அடைக்கலவன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top