Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் ஆராதனை விழா

புதுக்கோட்டை

நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை விழா

புதுக்கோட்டை  திருமயம் சாலை   நமணசமுத்திரத்தில் கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில்  உலக நன்மைக்காக சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே  நமணசமுத்திரத்தில்  அமைந்துள்ள சமஸ்தான ஆதி  ராஜகுரு மஹாபாஷ்யம்   ஸ்ரீ கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில்   உலக நன்மைக் காகவும் உலக மக்கள் அனைவரும் நலம் பெற  வேண்டியும்  சிறப்பு ஆராதனை  விழா சென்னை என் .ஜெயசிங்கன் ஜெ.சித்ரா தம்பதியினர்  முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் அதிஷ்டானத்தின் அறங்காவல் குழு தலைவர் மும்பை  முத்துக்குமார்  மற்றும் ஜெ.சித்ராஜெயசிங்கன்   உறுப்பினர்    சுந்தர்ராஜன் என்ற மணி  உள்ளிட்ட பிரமுகர்கள், சுற்று வட்டார பொதுமக்கள், பக்தர்கள் ஆராதனை விழாவில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.  ஏற்பாடுகளை அதிஷ்டான நிர்வாகி  தலைவர்  முத்துக்குமார்     செய்திருந்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top