Close
ஜூலை 5, 2024 10:46 காலை

புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் திருவிழா

புதுக்கோட்டை

வாரியாபட்டி புனித அடைக்கல அன்னைதேவாலயத்தில் நடைபெற்ற புனித செபஸ்தியார் தேர்பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வாரியாபட்டி புனித அடைக்கல அன்னை தேவாலயத்தில் 30 -ஆம் ஆண்டு புனித செபஸ்தியார்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு பங்குத் தந்தை ஜி.ஜேம்ஸ்ராஜ், நமனசமுத்திரம் எஸ்.மரியமைக்கேல் அடிகளார் ஆகியோக் தலைமையில் தேவாலயத்தில் மாலை 6 மணிக்கு  கூட்டுப் பாடல் திருப்பலியும், இரவு 7 மணியளவில் புனித செபஸ்தியா ரின் தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.

இதில். அப்பகுதியைச் சார்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அன்பின் விருந்து எனும் அன்னதானம் நிகழ்வில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை காரியஸ்தர் எஸ். அடைக்கலம், கணக்கர் ஏ. ராஜன், பொருப்பாளர் எஸ். சேசு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top