Close
ஏப்ரல் 23, 2026 11:27 மணி

குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அருகில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளார்.

மதுரை:

நவம்பர் 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் பள்ளிகள் மற்றும் பொது நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

அதனையொட்டி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையான மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ,குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயண பேரணியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்புக்கான பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top