Close
பிப்ரவரி 22, 2025 12:57 மணி

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு கூட்டம்..!

ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் :

விழுப்புரத்தில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது .

பிப்ரவரி 15- ந்தேதி சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு, பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஜெ.இ.பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top