Close
மார்ச் 7, 2026 6:48 மணி

பெரியபாளையம் அருகே கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் பெரியபாளையம் அடுத்த வடமதுரையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெரியபாளையம் ராஜா, துணை அமைப்பாளர்கள் அசோக் குமார், சுந்தர், கார்த்திக், சரத்குமார் வரவேற்றனர். தலைமைச் செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி,ஒன்றிய துணைச் செயலாளர் இரா.அப்புன்,ரமேஷ், கருணாகரன்,ஆகியோர் முன்னில வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ. கோவிந்தராஜன், தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் விபி. ரவிக்குமார், ஏனம்பாக்கம் சம்பத், ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐ.ராஜா செய்திருந்தார். முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தினேஷ், லோகேஷ் நன்றி கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top