திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 55 பயனாளிகளுக்கு முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.பி. அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டா வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி , வீ டு கட்டும் ஆணையை வழங்கிப் பேசியதாவது;
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பழைய காலத்து வீடுகள் அனைத்தும் பழுது பார்க்க வேண்டி என்னிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து முதலமைச்சர் இடமும் துணை முதலமைச்சர் இடமும் அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்து இந்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள அந்த காலத்து அரசு வீடுகள் பழுது பார்க்க வேண்டிய நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையின் அடிப்படையில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டத்தின் மூலம் 55 பயனளிகளுக்கு வீடு கட்டும் ஆணையை இப்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணிகளை தொடங்கி வீடுகள் கட்டுமான பணிகள் செய்ய வேண்டும் பணிகளை செய்து விரைந்து முடித்து வீட்டை பயன்படுத்த கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




