Close
மார்ச் 7, 2026 7:19 மணி

பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை ஒரு மாதத்திற்கு முன்பே அளிக்க விக்ரம ராஜா கோரிக்கை

நிகழ்ச்சியில் பேசிய எ.வ.வே. கம்பன்

தீபாவளியை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு முன்பே பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் வழங்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்தார்.

திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா, திருவண்ணாமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே. கம்பன் சிறப்புரையாற்றினார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா, கூறியதாவது

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பட்டாசு வியாபாரிகளை பாதுகாப்பதற்கு உறுதி ஏற்றிருக்கிறோம். தீபாவளியை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பே பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கிட வேண்டும்,

24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என முதல்வா் அறிவித்திருக்கிறாா். ஆனால், காவல் துறையினா் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறாா்கள்.

இணையவழி வா்த்தகம் மக்களை வீட்டோடு முடக்கி விடும். ஆரோக்கியம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இணையவழி வா்த்தகத்தை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் எந்த மாநில பக்தா்களாக இருந்தாலும் அவா்கள் தமிழ் பண்பாட்டை பாா்த்து தமிழ் பேசுவதற்கான சூழலை நாம் உருவாக்குவோம்.

நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி, பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தவும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

வணிகா் சங்க பேரமைப்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கும் கட்சிக்கே வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்போம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட் டமைப்பு மாநிலத் தலைவர் ராஜா சந்திரசேகரன், மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top