திருவண்ணாமை மாவட்ட இளையோர் தடகளப் போட்டிகள் 2025 திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தால் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற காலை 8.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தெரிவித்திருப்பதாவது:
இந்த இளையோர் தடகளப் போட்டி 14,16,18,20 ஆகிய வயதிற்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் தட்டு எறிதல் உள்ளிட்ட தடகளபோட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் இரண்டு தனி நபர் போட்டிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விண்ணப்பிக்க கூடிய மாணவர்கள் வயது வரம்பிற்கான ஆவணங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்கள் தங்களது நுழைவுப்படிவத்தை எக்ஸெல் பார்மெட்டில் entrytvm@gmail.com இணைய வழியாக ஆன்லைனில் வருகிற செப்டம்பர் மாதம் 8-ம்தேதி மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நுழைவு விண்ணப்ப படிவங்களை நேரடியாக கொடுத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக கலந்து கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் .




