காஞ்சிபுரம் தாயார் குளம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2018 ஆம் ஆண்டு கௌஷிகா என்ற பெண் குழந்தை பிறந்தது.
ஒரு வருடம் நலமுடன் இருந்த பெண் குழந்தை திடீரென உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு சிரமப்படுவதை அறிந்த பெற்றோர்கள் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மரபணு குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அதற்கான ஊசிகள் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினர்.
கூலித் தொழிலான செல்வகுமார் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் தன்னால் இயன்றவரை அதற்கான மருத்துவ செலவு மேற்கொண்டு நிலையில் தற்போது அவரால் தனது பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இக்குழந்தைக்கு ஊசிக்கு சுமார் 60 லட்சம் தேவைப்படும் நிலையில் அரசு இலவசமாக அளித்து ஓரளவு மேம்பட்ட நிலையில் தொடர்ந்து வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மருத்துவ உதவி கேட்டு தன் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் உதவி கேட்ட நிலையில் அதில் சிரமம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது மகளை அழைத்துக் கொண்டு வந்து உரிய சிகிச்சை அளிக்க அரசு மற்றும் முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உடனடியாக ஆட்சியர் அவர்களுக்கு தேவையான உதவிகளை மருத்துவத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மூன்றாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் மாணவரின் கேலியால் தற்போதுக்கு பள்ளி செயல்ல இயலாது என பெற்றோரிடம் தெரிவித்து வீட்டில் உள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.
பேட்டி :
ராஜபாண்டியன் – குழந்தையின் உறவினர்.




