திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், வருடந்தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, மதியம் 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் சுவாமி கருவறையில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 6 மணிக்கு உற்ஸவர் உண்ணாமுலை அம்பாள், குமரக்கோயிலில் இருந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தார். இரவு 8 மணிக்கு பெரிய நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு, இரவு 11 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு மாலை மாற்றி திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு உற்ஸவ மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செங்கம்
செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு காமராஜா் தெருவில் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் இருந்து திருமண சீா்வரிசை எடுத்துவரப்பட்டு இரவு 7 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபவத்தில் பெண் பக்கதா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆரணி
ஆரணி நகரம், ஆரணி பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். சுமாா் ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.





