Close
மே 26, 2026 10:07 மணி

தூய்மை பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

தூய்மை காவலர்களுடன் முன்னாள் அமைச்சர் வேலு

திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.

தூய்மை அருணை திட்டத்திற்கு 4 மேற்பார்வையாளர்களும், 39 வார்டுக்கு 3 9 ஒருங்கிணைப்பாளர்களும், மாட வீதி தூய்மைப்பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும் ,  ஒவ்வொரு வார்டுக்கும் 25 தூய்மைக் காவலர்கள் என ஆயிரக்கணக்காணோர் மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூர்வாருதல் என செயல்பட்டு வருகின்றனர்.

கிரிவலப்பாதையில் உள்ள 20 குளங்களை தூய்மை அருணை அமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தூய்மை அருணை அமைப்பும், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மாதந்தோறும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு , முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கடந்த ஆண்டு  ஜூலை -16 அன்று தொடங்கி வைத்தார்கள். இது மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  காலை 7 மணிக்கு , திருவண்ணாமலை மாநகரில் நடைபெறும் தூய்மைப் பணிகள், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி ஆகியவற்றை முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் , தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்

அதனைத் தொடர்ந்து வார்டு எண்-28, தண்டராம்பட்டு சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் நடைபெறும் தூய்மைப் பணிகளையும்,

கிரிவலப்பாதையில் உள்ள வார்டு-26 செங்கம் சாலை, மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் எதிரில் கால்வாய் அடைப்பு, மரக்கன்றுகள் பராமரிப்பதை பார்வையிட்டு, முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆ லோசனைகளை வழங்கினார்.

வார்டு எண்.29 ஆதிஷேசன் நகரில் நடைபெறும் செடிகள் நிரம்பிய புதர்கள் மற்றும் கால்வாய் தூர்வரும் பணியினைபார்வையிட்டும், வார்டு எண்.24 வ.உ.சி. நகரில் நடைபெறும் கால்வாய் அடைப்பு தூய்மைப்பணிகள், வார்டு எண்.14, பேகோபுரத் தெருவில் நடைபெறும் கால்வாய் சுத்தப்படுத்துதல், மரம் நடுதல், வார்டு எண்.13, பெரியத் தெருவில் நடைபெறும் வரும் தூய்மை பணி மற்றும் கால்வாய் தூர்வாரும் பணியினை பார்யிட்டு ஆய்வு செய்தார். பச்சையம்மன் கோயில் அருகில் நடைபெறும் தூய்மை அருணை பணி மற்றும் மரக்கன்றுகள் பராமரித்தலை ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு வார்டிலும் ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அங்கு தூய்மை பணியில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பெண்களிடம் நலம் விசாரித்து, அவர்களை ஊக்கப்படுத்தினார் .

தூய்மைப் பணியில் தூய்மை அருணையின் மேற்பார்வையாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,  இரா . ஸ்ரீதரன், ப.கார்த்திவேல்மாறன், ப்ரியா ப.விஜயரங்கன். குணசேகரன் , ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் ந.சீனுவாசன், மாமன்ற உறுப்பினர் கே.பிரகாஷ், மற்றும் மாட வீதி ஒருங்கிணைப்பாளர்கள் அரு ணை. வெங்கட் , ஜீவரேகாவிஜயராஜ் உட்பட ஆயிரக்கணக்கான தூய்மைக் காவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top