Close
ஜூலை 14, 2026 5:53 காலை

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு லோக் அதாலத்: மாவட்ட நீதிபதி அறிவிப்பு

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஏடிஆர் கட்டிடத்தில், வருகிற ஜூலை 18ம் தேதி மற்றும் நவ. 21ம் தேதி பேங்க் செக் சம்மந்தமான வழக்குகளுக்கான சிறப்பு லோக் அதாலத் நடைபெற உள்ளது.

இதில், தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ள செக் சம்மந்தமான வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் உள்ள வழக்குகளும் சரசமாக பேசி முடிக்கப்படும். லோக் அதலாத் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு அப்பீல் கிடையாது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் சிறப்பு லோக் அதாலத் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள், இந்த லோக் அதலாத்தில் கலந்துகொண்டு வழக்குகளை சமரசமாக முடித்துக் கொள்ளலாம்.

வருகிற ஆகஸ்ட் 21, 22, 23ம் தேதிகளில், உச்சநீதிமன்றத்தில் விசாரணையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகி, வழக்கை முடித்துக்கொள்ள உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு சம்மந்தப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் வருகிற செப்.12ம் தேதியன்று, தேசிய லோக் அதலாத் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறுகிறது. இதில் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளள வழக்குகளை லோக் அதாலத் மூலம் முடித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top