Close
ஜூலை 14, 2026 5:48 காலை

வாகனங்களில் சாகசம் செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர்களுக்கு அபராதம்: ​6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்:

மதுரை மாநகரில், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் முன் பக்கச் சக்கரத்தை உயர்த்தி சாகசம் செய்துள்ளனர். அதனை வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைதளப் பக்கத்தில் ரீல்ஸாகப் பதிவிட்டுள்ளனர். தல்லாகுளம் மற்றும் நத்தம் மேம்பாலத்தின் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறி இந்த ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட நாகராஜ் (வயது 20), ஆலங்குளம் பகுதி, ​அழகுமாணிக்கம் (20), ஆலங்குளம் பகுதி, ​மோகன்குமார் (20), இளமனூர் பகுதி, ​விவேக் (20), வடக்கு மாசி வீதி, ​கபிலேஷ் (19), கருப்பாயூரணி, ​தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் ஆகிய 6 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும், சாகசத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இந்த நடவடிக்கையானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும். சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருசக்கர வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில்லா மதுரை மாநகரை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top