Close
மே 26, 2026 10:53 மணி

உசிலம்பட்டியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் 3 நாட்கள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று துவங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லும் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் முளைப்பாரி ஊர்வலமானது உசிலம்பட்டி மேலப்புதூரில் தொடங்கி தேனி சாலை, மதுரை சாலை, நாடார் புதுதெரு, வண்ணாரப்பேட்டை தெரு, விநாயகர் கோவில் தெரு, தேவர்சிலை உள்ளிட்ட உசிலம்பட்டியின் முக்கிய பகுதிகளில் வழியாக சென்றது.

அம்மன் காமதேனு வாகனத்தில் காட்சியளித்து முன்னே செல்ல சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக கோயிலுக்கு சென்றடைந்து நேர்த்திகடன் செலுத்தி பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.

மேலும் கோயில் கருவறையில் பத்ரகாளியம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளிக்க ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top