பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்தநிலையில் வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
வைகாசி பௌர்ணமி வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12.50 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. 30-ந் தேதி கிரிவலம் செல்வது சிறப்பானதாகும்.
பௌர்ணமியையொட்டி 30ம் தேதி வைகாசி விசாகம் என்பதால் அன்றைய தினத்தில் இருந்தே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் கிரிவலம் செல்ல வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் மாதம்தோறும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. அதன்படி, வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை மறுதினம் (30ம் தேதி) பகல் 12.50 மணிக்கு தொடங்கி, வரும் 31ம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, நாளை இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி, கிரிவலம் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினார். அண்ணாமலையார் கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம், தேரடி வீதி, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.
மேலும், தேரடி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் இடையூறு இல்லாமல் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.




