மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் சமூக நலத்துறையினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மற்றும் ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பேரணி , உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி பேரையூர் சாலை, தேவர் சிலை, தேனி சாலை வழியாக சென்று ஆர்.சி. சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவுற்றது.
இதற்கு முன்னதாக, பள்ளி மாணவிகளிடம் பேசிய சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார், நீங்கள் கல்லூரி வரைக்கும் படிக்க வேண்டும் கல்லூரி முடித்த பின்பு நல்ல வேலை வாய்ப்பு இருக்க வேண்டும். விளையாட்டுத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுங்கள், காவல்துறையை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றால் தேர்ந்தெடுங்கள், மருத்துவராக வேண்டுமென்றால் மருத்துவத்தைச் சேர்ந்தவர்கள் இதுதான் நல்லது, அடுத்து இந்தியாவின் நூற்றாண்டு தான் தமிழ்நாட்டின் நூற்றாண்டு தான் பத்து அல்லது 20 வருடங்களுக்கு பின்பு அனைவரும் தலைவர்களாக இருப்பீர்கள். நீங்க எல்லோரும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் முதன்மைத் தலைவர்களாக இருப்பீர்கள்.
என்னுடைய வேண்டுகோள் 18 வயதுக்கு கீழ் திருமணம் செய்யக்கூடாது. நீங்கள் திருமணம் செய்தால் எப்படி படிப்பீர்கள் அதனால்தான் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
தாய், தந்தை கேட்கவில்லை என்றால் என்னிடம் வாருங்கள், நான் பேசுகிறேன். நீங்கள் எல்லோரும் கண்டிப்பாக கல்லூரி வரை சென்று படிப்பை முடிக்க வேண்டும். அதற்காக அரசு நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.




