திருச்செங்கோட்டில் வருகிற 19ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் வருகிற 19ம் தேதி மாலை 3 மணிக்கு, கீழேரிப்பட்டியில் உள்ள, திருச்செங்கோடு கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
திருச்செங்கோடு கோட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு, குமரமங்கலம், உஞ்சனை, தேவனாங்குறிச்சி, கூட்டப்பள்ளி, மாணிக்கம்பாளையம், எலச்சிப்பாளையம், வையப்பமலை, பெரியமணலி, வேலகவுண்டம்பட்டி, மல்லசமுத்திரம், காளிப்பட்டி, மோர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களின் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை, கோரிக்கை மனுக்களாக அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




