Close
ஜூலை 9, 2026 12:20 காலை

கோலாகலமாக தொடங்கிய அண்ணாமலையார் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா

ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் 7 மகா உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில், ஆடி மாதம் தொடங்கும், தட்சணாயன புண்ணிய காலத்திற்காக, 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.

தை மாதம் முதல் நாள் தேவர்களின் பகல் காலம் என்று அறியப்படும், உத்திராயண புண்ணிய காலம் தொடங்கும். அதே போல, ஆடி மாதம் முதல் நாள், தேவர்களின் இரவுக் காலம் என்று சொல்லப்படும் தட்சணாயன இந்த உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷங்கள் நடைபெறும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தட்சணாயன புண்ய கால பூஜை ஜூலை 8, 2026 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை ஆனி பிரமோற்சவத்தில் வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகும், முன்னோர்களின் சாபம், தோஷம் தீரும் என்பது ஐதீகம்.

இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முதலில் விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலை என இரு வேலைகளிலும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் 4 மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top