Close
ஜூலை 16, 2026 3:27 காலை

பால் பாக்கெட்டில் கெமிக்கல் வாசனை புகார் எதிரொலி: கவர் பிலிமை மாற்றி ஆவின் மூலம் விநியோகம்

தேனி

நாமக்கல்லில் சப்ளை செய்யப்பட்ட ஆவின் பாலில் கெமிக்கல் வாசனை வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் பால் பாக்கட் கவர்கள் மாற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர்  மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதிதாக துவக்கப்பட்டுள்ள, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) மூலம், கடந்த ஏப். 27ம் தேதி முதல், நாளொன்றுக்கு சராசரியாக 82,000 முதல் 84,000 லிட்டர் பால் மற்றும் பால் பொருட்கள், 335 சில்லறை பால் ஏஜெண்டுகள் மூலம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் தேவைக்காக தினசரி விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி., (கிரீன் மேஜிக் பிளஸ்), 500 மி.லி., மற்றும் 1 லிட்டர் எப்சிஎம் வகை பால் பாக்கெட் செய்யப்பட்டு முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

தற்போது புதியதாக பெறப்பட்ட 200 மி.லி., (கிரீன் மேஜிக் பிளஸ்) பாக்கெட் கவர் பிலிம் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பால் பாக்கெட் பிலிமில் (கவர்) ஒருவித பெட்ரோ கெமிக்கல் வாசனை வருவதாக பொதுமக்கள் மற்றும் ஏஜெண்டுகளிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன.

பொதுமக்களின் ஆரோக்கியத்திலும், பாலின் தரத்திலும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்பதில் நாமக்கல் ஆவின் நிர்வாகம் உறுதியாக உள்ளதால், உடனடியாக இப்பிரச்சனை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட 200 மி.லி., கிரீன் மேஜிக் பிளஸ் கவரில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு தினசரி பால் விநியோகம் எவ்விதத் தடையுமின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய, தற்காலிக மாற்று ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி 200 மி.லி., பால் புதிய கவர் மூலம், அதே தரத்துடன், அதே விலையில் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top