Close
ஆகஸ்ட் 14, 2026 10:44 மணி

தோரண மலையில் ஆடி கடைசி வெள்ளி வேத மந்திரங்கள் ஒலிக்க வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை

தென்காசி மாவட்டம் கடையம் அமைந்துள்ள ஸ்ரீ தோரணமலை முருகன் கோவில் சித்தர்களால் முனிவர்களாலும் வழிபடப்பட்ட வரலாறு சிறப்பும் புராண சிறப்பு உடையதாகும்

ஒவ்வொரு மாத கடைசி வெள்ளி அன்றும் மலை மீதுள்ள சுனையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடையம் ஸ்ரீ பிரம்ம வித்யா குருகுல வேத பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க அடிவாரத்தில் உள்ள முருகன் சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அடுத்ததாக 21க்கும் மேற்பட்ட மணிகள் கட்டப்பட்டு மணி அடித்து வேல் பூஜை சிறப்பாக நடைபெற்றது. மற்றும் விவசாயம் தழைக்கவும் விவசாயி செழிக்கவும் மழை வேண்டி வேத மந்திரங்கள் ஒலிக்க கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காலை மதியம் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top