நாமக்கல்லில் நவீன கட்டிடப்பொருட்கள் கண்காட்சி சிறப்பாக துவங்கியது. அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ், அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் தொழில்முறை இன்ஜினியர்களின்அமைப்பாகும்.
இந்த அமைப்பின் நாமக்கல் மையத்தின் சார்பில், நவீன கட்டிட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி, நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று காலை மையத்தின் தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது..
பிஏஐ சாசன தலைவர் கணேசன், பிஏஐ நாமக்கல் மைய தலைவர் குணசேகரன், என்டிசிஇஏ தலைவர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சேர்மன் தங்கராஜ், பிரித்வி கான்கிரீட் சொல்யூசன்ஸ் ஜெகதீஷ் கண்ணா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைபின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ஆகியோர் சிறப்பு விருந்தினனர்களாக கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
வருகிற 17ம் தேதி வரை, 4 நாட்கள் தினசரி காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் நவீன கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், டீலர்கள் உள்ளிட்டோரின் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பொதுமக்கள் கட்டணமின்றி இந்த கண்காட்சியைப் பார்த்து பயன்பெறலாம் என அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ், நாமக்கல் மையத்தின் தலைவர் மணி, செயலாளர் சுகுமார், பொருளாளர் பிரபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.




