Close
ஆகஸ்ட் 14, 2026 4:09 மணி

விவசாயக் கடன் தள்ளுபடி செய்யக்கோரி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்

விவசாயக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, நாமக்கல்லில் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நாமக்கல்லில், மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம், முன்னாள் அமைச்சர்கள் பாலகிருஷ்ணா ரெட்டி, சரோஜா, ப.வேலூர் எம்எல்ஏ சேகர், கொள்கைபரப்பு இணை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை வழங்க வேண்டும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நீரை, தமிழகத்திற்கான உரிய காவிரி நீரை பெற்றுத்தரவேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், அமைப்பு செயலாளர் ராஜூ, எம்ஜிஆர் மன்றம் விஜயபாபு, அண்ணா தொழிசங்கம் நாகராஜன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top