Close
ஏப்ரல் 23, 2026 10:01 மணி

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

புதுக்கோட்டை

எருமப்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காவரக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் அங்குள்ள பேக்கரி ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 4-ம் தேதி எருமப்பட்டி பிடாரியம்மன் கோயில் பின்புறம் முருகன் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து புகாரின் பேரில், எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முருகன் மனைவி வள்ளி (37) மற்றும் அதே பேக்கரியில் மற்றொரு டீ மாஸ்டராக வேலை செய்து வந்த அருண்குமார் (25) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த முருகன், மனைவி வள்ளி மற்றும் அருண்குமாரையும் கண்டித்து வந்துள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், முருகனை கொலை திட்டமிட்டுள்ளார். இதன்படி கடந்த 3ம் தேதி இரவு முருகனை மது அருந்த அழைத்துச் சென்று, குடிபோதையில் கழுத்தை நெறித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அருண்குமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த வள்ளி மற்றும் எருமப்பட்டி ஐந்து ரோட்டைச் சேர்ந்த சிவா (26) ஆகிய 3 பேரையும் எருமப்பட்டி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் 3 பேரும் 15 நாட்கள் ரிமாண்ட் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top