Close
செப்டம்பர் 7, 2026 6:09 மணி

சிலம்பம் போட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவிகளை, பள்ளி தாளாளர் தங்கவேல் பாராட்டினார்.

எருமப்பட்டியில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்தனர்.

நாமக்கல் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, எருமப்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு சிலம்பம் போட்டியில், நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அபிநீத், கனிஷ், நிவாஷினி மற்றும் கனிஷ்கா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்றனர். இதே பள்ளியைச் சேர்ந்த மதூலிகா, பிரவஸ்தி ஆகியோர் 2ஆம் இடம் பெற்றனர்.

17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஹரிதா, ரித்தீஸ், கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 2ஆம் இடம் பெற்றனர். மிதுலாஸ்ரீ, ரித்திஷ் அஸ்வின் ஆகியோர் 3ஆம் இடம் பெற்றனர்.

சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top