நாட்டின் 80 வது சுதந்திர தின விழா, விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் விழாவாக நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, கிளைச்சிறையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களில் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
இதே போல், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில், நகர் மன்ற துணைத் தலைவர் தேன்மொழி தலைமையிலான நகர் மன்ற உறுப்பினர்கள் காந்தியடிகளின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.




