Close
ஆகஸ்ட் 15, 2026 7:24 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 80வது சுதந்திர தின விழா கோலாகலம்

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டுத்திடலில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் மதுபாலன், காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டனர். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் மாற்றுத்திறனாளிகள் துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் மொத்தம் 16 பயனாளிகளுக்கு ரூ. 33.72 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாவட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறையினர், 253 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 298 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

விழாவில், எருமப்பட்டி, பரளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், கந்தம்பாளையம் எஸ்கேவி பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கேஎஸ்ஆர் கல்லூரி உள்ளிட்ட மொத்தம் 9 பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 923 மாணவ, மாணவிகள் பங்கேற்ற வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், டிஆர்ஓக்கள் சரவணன், கண்ணன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top