Close
செப்டம்பர் 10, 2026 7:55 மணி

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பாதுகாப்பு மையத்தில் கட்டணமின்றி செல்போன் வைக்க அனுமதி

நாமக்கல் நரசிம்ம சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்கள் கட்டணமின்றி செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் வைத்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நரசிம்ம சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் செப்.,1 முதல் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்து உத்திரவிட்டுள்ளது.

இதன்படி கடந்த 1-ம் தேதி முதல் நாமக்கல் நரசிம்ம சுவாமி, ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரூ.5 கட்டணம் செலுத்தி தங்களது செல்போன்களை கோயில் ஊழியர்களிடம் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் செப்.,8-ம் தேதி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பாதுகாப்பு மையத்தில் வைத்து செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்ம சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் உள்ள பாதுகாப்பு மையத்தில் தங்களது செல்போன்களை இலவசமாக வைத்துச் செல்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top