Close
செப்டம்பர் 13, 2026 7:49 மணி

நாளை விநாயகர் சதுர்த்தி விழா: நாமக்கல்லில் சிலைகள் விற்பனை விறுவிறு

இந்தியா முழுவதும் நாளை செப். 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் நகரில் விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வீடுகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, நீர் நிலைகளில் கரைப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

இதற்காக, கடந்த ஒரு மாதமாக சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி பேப்பர்கூல், கிழங்குமாவு பசை, எளிதில் நீரில் கரையும் தன்மை கொண்ட வர்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி, ஒரு அடி முதல், 15 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

யானை, மயில், சிங்கம் உள்ளிட்டவற்றில், விநாயகர் அமர்ந்த நிலையில், பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிவமைத்து விற்பனைக்கு வந்துள்ளன. ரூ. 50 ரூபாய் முதல் 20,000 வரை விநாயகர் சிலைகள் விற்பனைவ செய்யப்படுகிறது.

நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top