Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை

புத்தகத்திருவிழா : மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புத்தக விழா குழு வெளியிட்டுள்ள தகவல்:
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வருகின்ற 29.07.2022 முதல் 07.08.2022 வரை நடத்துகிறது.

விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் கீழ்கண்ட விதிமுறைகளின்படி நடைபெற உள்ளது.

பேச்சுப்போட்டி: 6,7,8 வகுப்பு மாணவர்கள் ‘பெண்மையைப் போற்றுவோம்’ அல்லது ‘வாசிப்பை நேசிப்போம்’ 9, 10 வகுப்பு மாணவர்கள் ‘நூலைப்படி’ அல்லது ‘மக்கள் வாழ்வியல் அறிவோம்’ 11, 12 வகுப்பு மாணவர்கள் ‘அறிவை விரிவுசெய்’ அல்லது ‘இனிக்கும் இலக்கியம்’ என்ற தலைப்புகளில் பேச வேண்டும்.

கவிதைப்போட்டி: மேற்படி மூன்று பிரிவு மாணவர்களும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக தலைப்பு அறிவிக்கப்படும்.

ஓவியப்போட்டி: மேற்படி மூன்று பிரிவு மாணவர்களும் திருக்குறள் காட்சிகள் அல்லது இலக்கியக் காட்சிகள் என்ற தலைப்பில் ஓவியம் வரைய வேண்டும்.

போட்டிகள் 13 ஊராட்சி ஒன்றிய அளவிலும் மற்றும் 2 நகராட்சி அளவிலும் தனிதனியாக நடைபெறும். இதில் ஒரு பிரிவில் இருவர் மட்டுமே பங்கேற்கலாம். முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் வருகின்ற 12.07.2022 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஒன்றியம் மற்றும் நகராட்சி அளவில் முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

மாவட்ட அளவிலான போட்டி வருகின்ற 14.07.2022 வியாழக்கிழமை புதுக்கோட்டை ஸ்ரீபிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு தொடங்கும். மேலும் விவரங்களுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கு.ம.திருப்பதி (செல்:9443184890), மகா.சுந்தர் (செல்: 9442232678) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top