புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 79ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார்.
பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக அரசு மருத்துவக் கல்லுரி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் ஜி.ஏ. ராஜ்மோகன் மற்றும் மகப்பேறு மருத்துவர் எஸ். சுகன்யா அவர்களும் மகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவர் செல்வி துரைமணி அவர்களும் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஜி.ஏ. ராஜ்மோகன் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார். சிறப்பு விருந்தினர்களால் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்திய சுதந்திர தினத்தன்று பிறந்த மாணவர்களுக்கு பிறந்த நாள் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் எல்.கே.ஜியில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சர்வதேச மற்றும், மாநில அளவில் பல்வேறு விருதுகள் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. காந்தி, நேரு, பாரதியார், வேலுநாச்சியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள், வேடமணிந்து வந்த மழலைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர்.

ஏழாம் வகுப்பு மாணவர் சஞ்சய்குமார் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி ஆகியோர் சுதந்திர தின உரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கினர்.
சுதந்திர தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் விதமாக பள்ளி மாணவிகள் தேசபக்திப் பாடல்களை இசையுடன் பாடினர். தொடர்ந்து மாணவர்களின் விடுதலைத் திருநாள் நடனங்கள், பார்த்தவர்கள் பாராட்டும்படி கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.
சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் சுகன்யா மற்றும் மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் செல்வி துரைமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.




