Close
மார்ச் 7, 2026 2:50 மணி

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20ம் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான கல்வி கடன் முகாம், வருகிற 20ம் தேதி, எர்ணாபுரம் தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கான, 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான, கல்வி கடன் முகாம் வருகிற 20ம் தேதி, எர்ணாபுரம் சிஎம்எஸ் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.

கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டு, 10, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வயது சான்றுக்கான பள்ளி மாற்றுச் சான்று, கல்லூரியிலிருந்து வழங்கப்பட்ட அனுமதி கடிதம், கல்லூரி கட்டண விவரம், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் கணக்கு எண் போன்ற ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும்.

கல்வி கடன் பெற விரும்பும், நாமக்கல் வருவாய் கோட்டத்தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை மற்றும் ராசிபுரம் தாலுகா பகுதியைச் சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top