Close
மார்ச் 9, 2026 11:16 மணி

வரும் 15தேதி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு: நாமக்கல்லில் 581 பேர் எழுதுகின்றனர்

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுகள் வருகிற 15ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 581 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) ஒத்திவைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ குடிமைப்பணிகள் போட்டித் தேர்வு, வரும் 15ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், 15ம் தேதி காலை 9:30 முதல் 12:30 மணிவரை ஓஎம்ஆர் விடைத்தாள்கள் மூலம் தேர்வு நடைபெறும். மதியம் 2:30 முதல் 5:30 வரை டிஸ்க்ரிப்டிவில் முறையில் தேர்வு நடைபெறும். இதற்காக, நாமக்கல் வேட்டாம்பாடியி பிஜிபி இண்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் காலையில் 283 தேர்வர்களும், மதியம் 298 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

காலையில் நடைபெறும் தேர்விற்கு காலை 8.30 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்விற்கு மதியம் 1.30 மணிக்குள்ளும் தேர்வு கூடங்களுக்கு, தேர்வர்கள் உரிய அனுமதி சீட்டுடன் வருகைதர வேண்டும். காலை தேர்விற்கு 9.00 மணிக்கு மேலும் பிற்பகல் தேர்விற்கு 2.00 மணிக்கு மேலும் தேர்வு கூடத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வாணையத்தால் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டுவர கொண்டுவர அனுமதி இல்லை. தேர்விற்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top