Close
ஜூன் 7, 2025 3:21 காலை

இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம்: ஆண்டுக்கு ரூ. 3,337 கோடி வருவாய்

இந்திய இரயில்வேயின் இரயில் நிலையங்கள், கடைகள் அல்லது விளம்பரங்கள் போன்ற பல்வேறு வருவாய் ஆதாரங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கின்றன, ஆனால் இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது தெரியுமா?

இந்தியாவின் ரயில்வே அமைப்பு உலகில் நான்காவது பெரியதாக உள்ளது. தினசரி அடிப்படையில், இந்திய ரயில்வே 13,000க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்குகிறது, அதன் விரிவான நெட்வொர்க்கில்  7,308 க்கும் மேற்பட்ட நிலையங்களுடன், தினசரி 13,000 ரயில்களில் 2 கோடி பயணிகளை ஏற்றிச் செல்கிறது..

விளம்பரங்கள், கடைகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள், .ஓய்வு அறைகள், காத்திருப்பு கூடங்கள் ஆகியவற்றில் இருந்து இந்திய இரயில்வே தனது குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகிறது

2023-24 நிதியாண்டில் புது டில்லி ரயில் நிலையம் ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டியது. வருவாயில் முன்னணியில் இருப்பதுடன், ஆண்டு முழுவதும் 39,362,272 பயணிகள் வந்து செல்லும் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

இரண்டாவது இடத்தில், ஹவுரா ரயில் நிலையம் இந்தியாவின் இரண்டாவது அதிக வருவாய் ஈட்டும் நிலையமாகும். மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள நிலையத்தின் ஆண்டு வருமானம் ரூ.1692 கோடி. மேலும், ஹவுரா ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top