கோழி முட்டைகள் பொதுவாக முட்டைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால், கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதை காண மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், நல்லுார் கிராமத்தில் வசிக்கும் சையத் நுார். என்பவர் நாட்டுகோழிகள் வளர்க்கிறார். இவரிடம் உள்ள 10 நாட்டு கோழிகளின் முட்டைகளை அவர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, முட்டைகளை எடுக்க, கோழிகள் கூடுக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாட்டு கோழிகளில் ஒன்று, வெள்ளை நிறத்துக்கு பதிலாக, நீல நிறத்தில் முட்டையிட்டிருந்தது.
இது குறித்து உடனடியாக, கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே, அங்கு வந்த அதிகாரிகளும் ஆச்சரியம் அடைந்தனர். முட்டை நீல நிறத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
நீல நிற முட்டையை காண, சுற்றுப்புறங்களில் இருந்து, மக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். நீல நிற முட்டையிட்ட கோழியை, ஆய்வுக்கு உட்படுத்த கால்நடை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோழியின் கணையத்தில் உள்ள ‘பிலிவர்டின்’ என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.




