கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் காணாமல் போய், அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகைப் பறவையான ஜெர்டான்ஸ் கோர்சர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெர்டன்ஸ் கோர்சர் ஒரு இரவு நேரப் பறவை என்பதால் அவற்றை பார்ப்பதும் கண்டறிவதும் கடினமாக இருக்கும் இரவில் அது சுறுசுறுப்பாக இருக்கும். நீளமான கால்கள் மற்றும் பெரிய கண்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான தரையில் வாழும் பறவை ஆகும்.
முள் நிறைந்த புதர்களுக்கு இடையில் இது கண்ணுக்குத் தெரியாமல் நகர்ந்து செல்லும். இது சிறிய பொந்துகளில் பூச்சிகளை வேட்டையாடி, பின்னர் நீண்ட நேரத்திற்கு அசைவில்லாமல் நிற்கும். இதன் காரணமாக, இதனை கண்டுபிடிப்பது கடினம்.
இந்த இனம் மிகவும் அழிந்து வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய மதிப்பீடுகள் சுமார் 50 முதல் 249 வரை மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் இந்திய பறவை ஆர்வலர்களின் ஒரு சிறிய குழு வாரக்கணக்கில் தேடி அதன் சாத்தியமான வாழ்விடத்தை ஆராய்ந்தனர்.
பல வாரங்கள் சாத்தியமான வாழ்விடங்களை ஆராய்ந்த இந்தியப் பறவை ஆர்வலர்கள் குழு, களத்தில் இறங்கி முதல் நாள் இரவில் இரண்டு சப்தங்களை ரெகார்ட் செய்தனர். இந்த அரிய கண்டுபிடிப்பு, பறவைகளின் சப்தங்களை உன்னிப்பாக பதிவு செய்யும் பயோஅகாஸ்டிக்ஸ் என்ற புதிய ஆய்வு முறையைப் பயன்படுத்திச் சாத்தியமாகியுள்ளது.
அவற்றின் சப்தம் பதிவு செய்யப்பட்டதன் மூலம், இந்தப் பறவை இன்னும் காட்டுப் பகுதிகளில் வாழ்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழுவினர் பகலில் முறையாக அந்தப் பகுதியை எவ்வாறு ஆராய்ந்தார்கள், பின்னர் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அழைப்பைக் கேட்கத் திரும்பி வந்தார்கள்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் காணாமல் போய், அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகைப் பறவையான ஜெர்டான்ஸ் கோர்சர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பதிவு, பல ஆண்டுகளாக இந்தப் பறவையின் வாழ்விடமாக வரையறுக்கப்பட்ட நன்கு அறியப்பட்ட ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளுக்கு வெளியே இருந்து கிடைத்திருக்கிறது.




