Close
மார்ச் 7, 2026 11:29 காலை

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான முனைவர் நெ.து. சுந்தரவடிவேலு பிறந்த தினம் இன்று

பெருந்தலைவர் காமராஜரின் திட்டத்தின்படி இலவசக்கல்வி, இலவசச் சீருடை மற்றும் இலவச மதிய உணவு திட்டங்களை செயல்படுத்திய கல்வித்துறை இயக்குனரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் எழுத்தாளருமான முனைவர் நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு பிறந்த தினம் இன்று

தமிழகக் கல்வித்துறைச் செயலர் என்னும் உயர்பதவியில் இருந்த சுந்தரவடிவேலு ஐரோப்பாவின் சர்ச் ஸ்கூல், கம்யூனிடி ஸ்கூல் போன்ற அமைப்புகளை நேரில் சென்று ஆராய்ந்து அந்த பாணியில் தமிழகத்தில் உருவாக்கிய பஞ்சாயத்துப் பள்ளிகளால்தான் இங்கே கல்விப்புரட்சி ஏற்பட்டது. அதற்காக தன் முழுவாழ்க்கையையும் அர்ப்பணித்தார். பின்னர் வந்த ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மறைக்கவும் பட்டார்.

கிராமங்களில் விவசாயிகள் நெல் அறுவடையின் போது முதல் படியை சாமிக்கும் இரண்டாவது படியை ஊர்த் தொழிலாளர்களுக்கும் ஒதுக்குவதைப்போல பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்துக்காக மூன்றாவது படியையும் ஒதுக்கக் கோரி அதில் வெற்றியும் பெற்றார்.

இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top